×

தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல்

திருச்சி: கோவிந்தம்மாள் தமிழ்மன்ற 28வது ஆண்டு விழா மன்றத்தலைவர் கவிஞர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. திருச்சி மகளிர் தனிச்சிறை கண்கானிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் முருகானந்தத்துக்கு நற்றமிழ் மாமணி விருதையும், லால்குடி முத்துராமகிருஷ்ணனுக்கு நற்பணி மாமணி விருதினையும் வழங்கினார். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தவச்செல்வம், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், தொழிலதிபர் மனோகரன், தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து முனைவர் அருணாசலம் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் பிரபு, காருண்யா, சண்முகவள்ளி, சிரிநிதி, ஆபிராமி ஆகியோர் கலந்து கொண்ட சொல்லரங்கமும், வல்லநாடன் கணேசன் தலைமையில் ஜெயலட்சுமி, லட்சுமி, செசிலி, கார்த்திகா, வைகை மாலா ஆகியோரின் கவியரங்கமும் நடந்தது.

 

The post தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Govindhammal Tamil Mandra ,Govindaswamy ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...