×

காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: சேலத்தில் 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கன்னங்குறிச்சியை சேர்ந்த கண்ணன்(31), அவரது சகோதரர் ரத்தினவேல்(33) என்பதும், கன்னங்குறிச்சி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி மாடு வைத்திருப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்க கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: சேலத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Food Material Trafficking Prevention Unit Police ,Salem District ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...