×

ஆயுத பூஜை, தொடர் விடுமுறை; 48 ஆயிரம் பேர் ஊட்டி வருகை

ஊட்டி: ஆயுத பூஜை, தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 48 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது 2வது சீசன் நிலவி வருகிறது. இதை முன்னிட்டு கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தேனிலவு தம்பதியரின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், வார விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாகவும், கர்நாடகாவில் தசரா பண்டிகை விடுமுறை காரணமாகவும் ஊட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்டவைகள் களைகட்டின.

குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதமான காலநிலை நிலவிய நிலையில், அதனை அனுபவித்த படியே சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர். ஊட்டி ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனிடையே தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த 21ம் தேதி 10,600 பேரும், ஞாயிற்றுக்கிழமை 17 ஆயிரம் பேரும், ஆயுதபூஜை தினத்தன்று நேற்று 21 ஆயிரம் பேர் என 3 நாட்களில் மொத்தம் 48 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திருந்தனர்.

The post ஆயுத பூஜை, தொடர் விடுமுறை; 48 ஆயிரம் பேர் ஊட்டி வருகை appeared first on Dinakaran.

Tags : Ayuda ,Puja ,Ooty ,Ayudha Puja ,Ooty Government Botanical Garden ,Ayudha ,
× RELATED மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம்