×

நத்தத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

நத்தம், அக். 23: நத்தத்தில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 14 அணிகள் பங்கேற்றன. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் இராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சந்திரகுமார் தலைமை வகித்தார்.

முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாங்கம், டாக்டர் இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை முன்னாள் லெப்டினன்ட் கர்னல் மற்றும் தேசிய கைப்பந்து வீரருமான சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இராம்சன்ஸ் கல்வி குழும தாளாளர் இராமசாமி நன்றி கூறினார்.

The post நத்தத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Nadda ,Natham ,Nattham ,Dindigul district ,Nattam ,Dinakaran ,
× RELATED நத்தத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி