×

சின்னமனூர் அருகே பெண் தற்கொலை

சின்னமனூர், அக். 23: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள சுக்காங்கல்பட்டி கள்ளர் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் முத்துக் கண்ணன்(55). இவரது மனைவி தேவி (48). அடகு வைத்த நகையைத் திருப்பித் தராததால் கணவருடன் தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துக்கண்ணன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரது மனைவி சடலமாக தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்த புகாரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னமனூர் அருகே பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Muthuk Kannan ,Sukkangalpatti Kallar School Street ,Odaipatti Municipality ,Chinnamanur.… ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்