×

வேன் மோதி மூதாட்டி பலி ஆம்பூரில்

ஆம்பூர்: ஆம்பூரில் நேற்று சரக்குவேன் மோதியதில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியானார். ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் நில வள வங்கி அருகே 64 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மதியம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற ஒரு சரக்கு வேன் மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட மூதாட்டி அங்கேயே பரிதாபமாக பலியானார். உடனடியாக அங்கு சென்ற ஆம்பூர் டவுன் போலீசார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வேன் மோதி மூதாட்டி பலி ஆம்பூரில் appeared first on Dinakaran.

Tags : Ambur ,Ampur ,Sanangkuppam ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி