×

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அரசு பள்ளியில் என்எஸ்எஸ் திட்ட முகாம் துவக்கம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர்(பொ) முருகபாண்டியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்.சம்பந்தம் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர். அருள் வரவேற்று முகாமை தொடங்கி வைத்தார்.திட்ட அலுவலர் கணினி ஆசிரியர் சேரன் நன்றி கூறினார். உதவி திட்ட அலுவலர்கள் ராமமூர்த்தி ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாட்டுநலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்து ஓவியஆசிரியர்.ராதாகிருஷ்ணன் பேசினார். 7 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் தோட்டமானியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் பனை விதை நடுதல் மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

The post இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அரசு பள்ளியில் என்எஸ்எஸ் திட்ட முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : NSS Project Camp ,Vaideeswarankoil Government School ,Sirkazhi ,Vaideeswarankoil Government Higher Secondary School ,Sirkazhi, Mayiladuthurai district ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!