×

சென்னை ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும்…ஹக் நம்பிக்கை

பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியாதாவது: தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்து 2 தோல்வியை சந்தித்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்னும் 5 ஆட்டங்கள் இருக்கின்றன. அல்லாவின் கருணையால் கட்டாயம் அரையிறுதிக்கு முன்னேறுவோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் 300 ரன்னுக்கு மேல் இலக்காக கொண்டு விரட்டுவதால் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை. எல்லாமே குழு முயற்சிதான். தனிப்பட்ட ஆட்களின் கையில் ஏதும் இல்லை. ஆட்டத்தில் நெருக்கடி என்பது பந்துவீச்சாளர்களுக்கோ, பேட்ஸ்மேன்களுக்கோ என்று பிரித்து பார்க்க முடியாது.

அதிக சிக்சர் அடிக்க நல்ல புரோட்டின் உணவும், உரிய பயிற்சியும், மன உறுதியும் அவசியம். சென்னையை பொறுத்தவரை எங்களுக்கு சிறந்த முன்மாதிரிகள் இருக்கின்றன. இங்கு நாங்கள் நல்ல வெற்றிகளை பெற்றிருக்கிறோம். எங்கள் சீனியர் சயீத் அன்வர் இங்குதான் 194 ரன் விளாசி இருக்கிறார். சென்னை ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். அதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். அணியில் மாற்றம் இருக்குமா என்பதை கேப்டன், பயிற்சியாளர் தான் முடிவு செய்வார்கள். சென்னையில் விளையாடும் அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

The post சென்னை ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும்…ஹக் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pakistan ,Imam-ul-Haq ,Haq ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா