- கே
- அலகிரி
- காங். எஸ்சி
- மீ ஆ.
- ரஞ்சன் குமார்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- அககிரி
- காங்கிரஸ் எஸ்சி துறை
- ரஞ்சங்குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- க.
- காங்கிரஸ்
- எம். பி. ரஞ்சன்குமார்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிவிப்பின் பேரில் தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஏழை மக்களுக்கு நேற்று பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது. சென்னை எழும்பூர் தொகுதி புதுப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளர் டாக்டர் எஸ்.கே.உமாபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் ஜாபர், நரேஷ், சூர்யா, ஐயப்பன், ஜான்சன், சக்ரவர்த்தி, ரியாஸ், முரளி கிருஷ்ணா, ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் கலந்து கொண்டு பிறந்தநாள் கேக்கினை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சட்டை, சேலை மற்றும் நலிந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த 36 பேருக்கு தலா ரூ.5000, பெண் ஒருவருக்கு மகப்பேறு செலவாக ரூ.40,000, நலிந்த பெண் ஒருவரின் மகன் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10,000 நிதி என மொத்தம் ரூ.3.50 லட்சம் நிதி உதவியை வழங்கினார். இதே ேபால மாநில செயலாளர் விஜயசேகர் தலைமையில் பெசன்ட் நகர் விநாயகர் கோயிலில் தங்க தேர் ஊர்வலமும், எஸ்சி துறை மாநில துணை தலைவர் நிலவன் தலைமையில் 300 பேருக்கு புடவை, வேட்டியும், வட சென்னை எஸ்சி துறை மாவட்ட தலைவர் சரத்பாபு தலைமையில் 300 பேருக்கு பிரியாணி, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
The post கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு நலிந்த காங்கிரசாருக்கு நல உதவி: காங்.எஸ்சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வழங்கினார் appeared first on Dinakaran.