×

சேப்பாக்கத்தில் நாளை பாகிஸ்தான்-ஆப்கன் மோதல்

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. முதல் 2 போட்டியில் நெதர்லாந்து, இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் , அடுத்த 2 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சொதப்பலாக உள்ளது. ரிஸ்வான் மட்டும் 294 எடுத்து முதுகெலும்பாக உள்ளார். பவுலிங்கில் அப்ரிடியை தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி இறைக்கின்றனர்.

மறுபுறம் ஆப்கன் இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில், வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இரு அணிகளும் நாளை கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகின்றன. தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். இந்தியா-பாகிஸ்தான் போன்று ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இரு அணிகளும் இதுவரை 7 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் தான் வென்றுள்ளது. இதில் கடந்த உலக கோப்பையில் மோதிய போட்டியும் அடங்கும். இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடி வென்றது.

The post சேப்பாக்கத்தில் நாளை பாகிஸ்தான்-ஆப்கன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan-Afghan conflict ,Chepbaaq ,Chennai ,Pakistan ,Afghanistan ,Sepakkam Stadium ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...