×

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய இம்ரான் கான் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ!

தேனி: பல பேரை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய இம்ரான் கான் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது. பல பேரை மூளை சலவை செய்து, தீவிரவாத பயிற்சிக்கு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை இம்ரான் கான் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு தீவிரவாதிகளை வரழைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், இதனை அறிந்த இம்ரான் கான் தலைமறைவானார். இந்நிலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இம்ரான் கான் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர். இம்ரான் கான் ஓராண்டுகளாக உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

The post ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய இம்ரான் கான் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ! appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,ISIS ,N. I. Ah! ,Theni ,N. I. Ah ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு