×

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரடியடிக்கபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ம் தேதி மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 27 பேரை சிறைபிடித்து இலங்கை சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி 7 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவு எல்லையில் மீன்பிடிக்க சென்றபோது, அங்கு ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரடியடித்தனர். அதுமட்டுமின்றி 2 படகுகளில் இருந்து மீன்பிடி வலைகளை வெட்டி சேதபடுத்தி, இந்த பகுதிக்கு வரகூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு காலையில் கரைதிரும்பினர். கரைதிரும்பிய மீன்வர்களும், மீனவர் சங்க தலைவர்களும் கூறும் போது; மீன்பிடிக்க சென்றாலே இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர் நிகழ்வாக உள்ளது. இதனை தடுக்க வேண்டுய ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துவருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின், மீன்பிடி தொழில் நழிவுறும் சூழல் நிலவுகிறது.

ஒருபடகு கடலுகு மீன் பிடிக்க செல்லும்போது சுமார் ரூ.50,000 முதல் ரூ.,1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல், சிறைபிடிப்பு காரணமாக தொழில் நஷ்டம் ஏற்படுகிறது என கூறியுள்ளனர்.

The post கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameshwaram ,Kachathivu ,Kachativu ,Rameshwaram Fishing Port ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை