×

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்துள்ளனர். ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உட்பட ரூ.50,000 மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

The post வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...