×

ரூ.5000 கோடி சூதாட்ட செயலி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ராய்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. சட்டீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சவுரப் சந்திரகர், ரவி உப்பல், விகாஸ் சபாரியா, சந்திரபூஷன் வர்மா, சதீஷ் சந்திரகர் உள்ளிட்ட 14 பேர் அடங்கிய 197 பக்க முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

The post ரூ.5000 கோடி சூதாட்ட செயலி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Raipur ,Enforcement Directorate ,Saurabh Chandrakar ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு