×

மிசோரமில் 16 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: வாபஸ் பெற நாளை கடைசி நாள்

அய்சால்: மிசோரமில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி முடிவடைந்துள்ள நிலையில் அங்கு 16 பெண்கள் உட்பட 174 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மிசோரமில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 7ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 16 பெண்கள் உட்பட 174 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி சார்பில் 25 எம்எல்ஏக்கள் உட்பட 40 தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இக்கட்சியை தவிர எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்), காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜ சார்பில் 23 பேரும், ஆம் ஆத்மி சார்பில் 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக 27 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

The post மிசோரமில் 16 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: வாபஸ் பெற நாளை கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aizawl ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி