×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது..!!

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV -D1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து மாதிரி விண்கலம் ஏவப்பட்டு விண்ணில் பாய்ந்தது. மாதிரி விண்கலத்தை தரையிலிருந்து 16.6கிமீ தூரம் அனுப்பி வங்கக்கடலில் இறக்கப்பட்டு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெறும் 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் என இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. 2025-ல் விண்ணிற்கு 3 வீரர்களை இந்தியா அனுப்புகிறது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியாவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Space Sriharikota ,Gaganyaan ,
× RELATED ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு...