×

சீர்காழியில் தொல்லை தந்த 74 பன்றிகள் பிடித்து அகற்றம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் வியாபாரிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த பன்றிகள் திடீரென்று சாலைகளில் குறுக்கே சென்று வந்ததால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் நடந்தது. மேலும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சீர்காழி நகராட்சி அலுவலகத்திலும் பொது மக்கள் புகார் அளித்தனர், இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சிக்கு பகுதிகளில் ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆலோசனையில் பன்றி பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

The post சீர்காழியில் தொல்லை தந்த 74 பன்றிகள் பிடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Sirkhazi ,Sirkazhi ,Mayiladuthurai district ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!