×

போதைப்பொருள் பணத்தில் இயங்கும் பாகிஸ்தான் ராணுவம்: வாஜ்பாய் ஆலோசகர் வெளியிட்ட தகவல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஊடக ஆலோசகராக இருந்தவர் அசோக் டான்டன். இவர் எழுதிய ‘தி ரிவர்ஸ் ஸ்விங் – காலனியிசம் டு கோஆபரேஷன்’ என்ற நூல் சமீபத்தில் வெளியானது. இதில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியவை தாவூத் இப்ராகிமின் போதைப்பொருள் கடத்தல் பணத்தில் மூழ்கிக் கிடப்பதாக தெரிவித்துள்ளார். மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார். அங்கு போதைப்பொருள் கடத்தலை அவர் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆதரவோடு நடத்தி வருவதாக அசோக் டான்டன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

The post போதைப்பொருள் பணத்தில் இயங்கும் பாகிஸ்தான் ராணுவம்: வாஜ்பாய் ஆலோசகர் வெளியிட்ட தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,New Delhi ,Atal Bihari Vajpayee ,Ashok Danton ,Vajpayee ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு