அறந்தாங்கி,அக்.20: அறந்தாங்கியில் இன்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார். அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட், பேராவூரணி சாலை, வடகரை முருகன், கோவில் அக்ஹரா சாலை அருகே, பட்டுக்கோட்டை சாலை ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உயர் மின் கோபுர விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், நவாஸ்கனி எம்பி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நகர செயலாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.
The post அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 5 இடங்களில் உயர் மின்கோபுர விளக்குகள் appeared first on Dinakaran.
