×

மொபட்டில் இருந்த ₹1.50 லட்சம் திருட்டு சிசிடிவி கேமரா மூலம் 2 பேருக்கு வலை குடியாத்தம் மாஜி ராணுவ வீரரின்

குடியாத்தம், அக்.19: குடியாத்தத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மொபட்டில் இருந்த ₹1.50 லட்சத்தை திருடிய 2 மர்ம ஆசாமிகளை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குபேந்திரன்(61), முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று மதியம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள வங்கியில் ₹1.50 லட்சத்தை எடுத்து கொண்டு அதை அவரது மொபட்டில் வைத்து குடியாத்தம்- காட்பாடி ரோடு 4 முனை சந்திப்பு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்றார். அங்கு மருந்து வாங்கி கொண்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்றதும் பார்த்தபோது, மொபட்டில் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குபேந்திரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில், 2 பேர் குபேந்திரன் மருந்து கடைக்கு சென்றபோது பணத்தை திருடி சென்றது பதிவாகியுள்ளது. தொடர்ந்து சிசிடிவி கேமராவின் ஆதாரத்தை வைத்து போலீசார் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மொபட்டில் இருந்த ₹1.50 லட்சம் திருட்டு சிசிடிவி கேமரா மூலம் 2 பேருக்கு வலை குடியாத்தம் மாஜி ராணுவ வீரரின் appeared first on Dinakaran.

Tags : Mobat ,Maji ,Dinakaran ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்