×

இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

திருச்சி, அக்.19: திருச்சியில் இளம்பெண்கள் உள்பட மாயமான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அமல்தாஸ்(34). இவரது மனைவி இந்திரா பிரியதர்ஷினி(34). கடந்த 16ம்தேதி கரூர் செல்வதற்காக இந்திரா பிரியதர்ஷினியை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஆரோக்கிய அமல்தாஸ் சென்றார். பின்னர் அவர் மாயமானார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பூமாதேவி (எ) கலைச்செல்வி(19). இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து ரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பாலக்கரை குட்ஷெட் ரோட்டை சேர்ந்தவர் பிரசாத் (32), அரிசி வியாபாரி. கடந்த 16ம்தேதி வியாபாரம் தொடர்பாக வெளியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் உள்பட 3 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Subramaniapuram ,Anna Nagarai ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு