மதுரை: வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. பழைய நகையை டெப்பாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதே எடையுள்ள புதிய நகையை தருவதாகக் கூறிவிட்டு ஒரு வருடம் கழித்து புதிய நகை கேட்ட போது தரமால் ஏமாற்றியதாக குற்றம் சாட்டபட்டுள்ளது. திடீரென நகைக் கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் வழக்கு தொடரபட்டுள்ளது.
The post வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.
