×

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து முதியவர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுபினையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரிடம் விவசாய வேலை செய்து வந்தவர் நாகப்பன் (65). இந்நிலையில் முருகன்  வீட்டின் அருகே கொட்டகை அமைத்து  நாகப்பனை அங்கேயே தங்க வைத்துள்ளார். கொட்டகையின் அருகே பயன்படுத்தாத பாழடைந்த அறை ஒன்று உள்ளது. இந்த அறையின் சுவர் தற்போது பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை திடீரென சுவரின் ஒருபகுதி இடிந்து குடிசை மீது விழுந்தது. 
இதில் குடிசையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நாகப்பன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகப்பனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Uttaramerur ,Murugan ,Sirupinayur ,Nagappan ,
× RELATED கோடையின் கடும் வெப்பத்தால் நீரின்றி...