×

நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில்

பள்ளிகொண்டா, அக்.18: வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தவர் சிரிப்பழகி சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நவராத்திரியையொட்டி சிேனகா- பிரசன்னா தம்பதியினர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வேலூரில் புரம் தங்க கோயிலுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தனர். அங்கு அவர்கள் நாராயணி அம்மன் மற்றும் தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்து மனமுருக வழிபட்டனர்.

தொடர்ந்து, பொற்கோயிலில் சக்தி அம்மாவை சந்தித்து சினேகா- பிரசன்னா தம்பதியினர் ஆசி பெற்றனர். அவர்களுக்கு சக்தி அம்மா நல்லாசி வழங்கி பிரசாதம் வழங்கினர். இதனையடுத்து, சிேனகா- பிரசன்னா குடும்பத்தினர் பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்த சினேகா- பிரசன்னா தம்பதியினர் கோயில் பிரகாரம், ராஜகோபுரத்தை சுற்றி வந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்ய நடிகை சிநேகா திடீரென வந்ததால் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

The post நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Sneha- Prasanna Swamy Darshanam ,Vellore Markabandeeswarar Temple ,Pallikonda ,Sneha-Prasanna ,Swami ,
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...