×

காளையார்கோவிலில் நாளை திமுக பொதுக்கூட்டம்

சிவகங்கை, அக். 16: காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாளை(அக்.17) நடக்க உள்ளது. காளையார்கோவில் தெப்பக்குள தென்கரையில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன், மாநில துணை பொது செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்றுகின்றனர். முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கல், பாக முகவர்களுக்கு செல்போன் வழங்கல், மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கல், மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட 7ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கட்சியினர், பொதுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

The post காளையார்கோவிலில் நாளை திமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kalayarkovil ,Sivagangai ,Eastern Union DMK ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...