×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் அஸ்வின் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.150 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், வடவள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, தனியார் அப்பார்ட்மெண்ட் அருகே சந்தேகம்படும்படி சுற்றி கொண்டிருந்த 3 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,RS Puram ,Syrian Church Road ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...