×

குறுவை விளைச்சல் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால், தஞ்சாவூரில் நெல் விளைச்சல் 33% குறைந்துள்ளது. காவிரி படுகையின் பிற மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால், 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் கருகியுள்ள நிலையில், கூடுதலாக மூன்றரை லட்சம் ஏக்கரில் விளைச்சலும் குறைந்திருப்பது உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குறைந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

The post குறுவை விளைச்சல் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kurvai ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Thanjavur.… ,Dinakaran ,
× RELATED முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் துவக்கம்