×

முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை: பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் அகமது பாட்சா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பகுருதீன் அகமது, மாவட்ட மீனவர் அணி தலைவர் மீரா மைதீன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹாஜா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமீன் அன்சாரி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெகபர் அலி, தமீன் அன்சாரி, மெகருன்னிசா, பெனாசிரா, ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜெர்மன் அலி, நிர்வாகிகள் சம்சுதீன், ஆரூரான் சாதிக், கட்சி நிர்வாகிகள் பல்வேறு அமைப்பினர், இஸ்லாமியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI party ,Muthupettai ,Muthupet ,Israel ,STBI ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய...