×

பைக் மீது பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, சேங்காலிபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மகன் ஜெகநாதன் (19). மணக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மகன் விக்னேஷ் (18). நண்பர்களான இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக இருவரும் ஒரே பைக்கில் சென்றனர்.

திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை ஜெகநாதன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே திருவாரூரில் இருந்து வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் ஜெகநாதன், விக்னேஷ் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் சபரியை (30) கைது செய்தனர்.

The post பைக் மீது பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Gnanasekaran ,Jaganathan ,Sengalipuram ,Gudavasal taluk, ,Tiruvarur district ,Manakal ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...