×

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட் நடமாட்டம்: தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

கூடலூர்: கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழ்நாடு எல்லையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வனத்துறையினருக்கு சொந்தமான சில அலுவலகங்களை தாக்கி அவர்கள் நோட்டீஸ் ஒட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வனப்பகுதியை கேரள காவல்துறை மற்றும் அதிரடி படையினர் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், மாவோயிஸ்ட்கள் தமிழ்நாடு வழியாக ஊடுருவி கேரளாவில் உள்ள காவல் நிலையங்களை தாக்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரள எல்லையான கூடலூர் பகுதியில் உள்ள நாடுகானி, சோலாடி, தாலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட் நடமாட்டம்: தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Maoist ,Kerala ,Tamil Nadu - ,Kerala border ,Cuddalore ,Maoists ,Tamil Nadu border ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை