×

ஆண்டிமடம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 

ஆண்டிமடம், அக்.13: ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள சிவன்கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்- விளந்தை அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோயில் முன் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆண்டிமடம்- விளந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதேபோல் திருக்களம்பூர் திருக்கோடி வனத்தீசுவரர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர் கோயில், விளந்தை அழகு சுப்பிரமணியர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post ஆண்டிமடம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : PRADOSHA WORSHIP ,SIWAN ,TEMPLES ,ANTIMADAM ,Shivankoil ,Pradosham ,Shiwan Temples ,Antimadam Region ,Dinakaraan ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா