×

எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்

முத்துப்பேட்டை, அக். 13: எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதராசு தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், அதில் பெற்றோர்களின் கடமை குறித்தும் பேசப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் முழு தேர்ச்சிக்கு பெற்றோர் அனைவரும் பள்ளிக்கு ஒத்துழைப்பு நல்குவது எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து பாட ஆசிரியர்களும், ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

The post எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Govt High ,School ,Itaayur ,MUTHUPETTA ,Udaiyur Govt. High School ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்