×

11 ஆடுகள் திருட்டு

உடன்குடி, அக். 13: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பில் 11 ஆடுகள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பை சேர்ந்தவர் ஜெபராஜ் தனசிங் (57). விவசாயம் மற்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் ஆடுகளும் வளர்த்து வருகிறார். பகல்வேளையில் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் வீட்டு காம்பவுண்டுக்குள் உள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டியில் அடைத்திருந்தார். மறுநாள் அதிகாலையில் சென்று பார்க்கும் போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும். இதேபோல் இவரது பட்டியில் பலமுறை ஆடுகள் திருடுபோய் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை கொண்டு மண்ணை சமன்படுத்தும் கருவி மற்றும் இரும்பு சக்கரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர், திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 11 ஆடுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Udengudi ,Cholaigudiru ,Menjnanapuram ,Menjnanapuram… ,Dinakaran ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது