×

கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு: ஆந்திராவில் அதிர்ச்சி

திருமலை: அரசு சார்பில் கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. ஆந்திர மாநில அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு தொகுப்புகள் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சித்தூர் மாவட்டம், ஜம்புவாரிபள்ளே ஊராட்சி சாந்திநகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

அதில் மானசா என்ற கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து தொகுப்பில் பேரிச்சம்பழம் பாக்கெட் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது. இதை பார்த்த கர்ப்பிணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தொகுப்பு பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு: ஆந்திராவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Snake ,Andhra ,Thirumalai ,AP State Government ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி