×

சென்னையில் இறந்தே பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசி சென்ற தந்தையிடம் போலீசார் விசாரணை

சென்னை: இன்று காலை சென்னை எழும்பூர் அருகே உள்ள கூவம் நதிக்கரையில் ஒருநபர் இறந்து பிறந்த குழந்தையை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீசப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரமாக போராடி வீசப்பட்ட குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் இறந்து பிறந்த குழந்தையை கூவம் நதிக்கரையில் வீசிய நபரை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த நபர் இறந்த குழந்தையின் தந்தை என்பதும் அவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த சுதர்ஷன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 10ம் தேதி எழும்பூர் நல மருத்துவமனையில் சுதர்ஷனுக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதையடுத்து மதுபோதையில் இருந்த சுதர்ஷன் இன்று காலை கூவம் நதிக்கரையில் வீசி சென்றுள்ளார். இதுதொடர்பாக சுதர்ஷனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னையில் இறந்தே பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசி சென்ற தந்தையிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Koovam river ,Chennai ,Egmore, Chennai ,
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...