×

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்த குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!!

சென்னை : ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர் 9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.உயிரிழந்த மீனவர் திரு. எல்.லெரின்ஷோ அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்த குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!! appeared first on Dinakaran.

Tags : Oman ,Chennai ,Kanyakumari district ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!