×

போலி குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்கை கிளிக் செய்த பாலிவுட் நடிகர்: ரூ.1.5 லட்சம் இழந்ததால் அதிர்ச்சி

மும்பை: போலி குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்கை கிளிக் செய்ததால் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானின் ஒன்றரை லட்சம் ரூபாயை இழந்துள்ளார். பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அஃப்தாப் ஷிவ்தசானி கேஒய்சி அப்டேட் லிங்கை கிளிக் செய்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், உங்கள் வங்கிக் கணக்குடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் உடனடியாக அப்டேட் செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் என்று குறுந்தகவல் வந்ததாகக் அவர் குறிப்பிட்டுளார்.மேலும் லிங்கை நான் கிளிக் செய்ததுமே, வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் பேசினார். பின் எண்ணைக் வாங்கி கொண்டார்.

பின்னர் எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தபோதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன் என்றும் புகார் மனுவில் அவர் தகவல்கள் தெரிவித்துள்ளார். மேலும் சைபர் கிரைம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து எந்த வங்கிக் கணக்குக்கு மோசடியாக பணம் சென்றடைந்ததோ அந்தக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post போலி குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்கை கிளிக் செய்த பாலிவுட் நடிகர்: ரூ.1.5 லட்சம் இழந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bollywood ,Aftab Shivdasan ,Dinakaran ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...