×

கடவூர் மற்றும் தோகைமலையில் சம்பா சாகுபடி பயிர்களுக்கு மருந்து தெளிப்பு பணி

*விவசாயிகள் மும்முரம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலையில் சம்பா சாகுபடியில் வயலுக்கு பயிர் தூர்பிடிப்பதற்காக முதல் மருந்து தெளிப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த வாரம் சம்பா சாகுபடிக்கான பயிர் நடவு பணிகளை, விவசாயிகள் தங்களது வயலுக்கு கற்பூரம் காண்பித்து தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் இன்னும் நடவு பணிகளை தொடங்காத நிலையில், கடந்த வாரம் நடவு பணிகளை முடித்த விவசாயிகள், நடவு செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் தூர்பிடித்து வளர்ச்சி பெறுவதற்கான முதல் கட்ட மருந்து தெளிக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஆற்றுப்பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதோரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் உள்ளது. இதேபோல் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளும் கிணறு மற்றும் குளத்துப்பாசன விவசாய நிலமாக உள்ளது.

இந்த ஆண்டு பருவமழை தொடங்கியபோதும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில் மாயனூரில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக இன்னும் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகளில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ள விவசாயிகள் மட்டும் சம்பாசாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகளும் சம்பா சாகுபடிக்காக விதை நெல் தெளித்து நாற்று உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு தற்போது நடவு பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பாசனத்திற்காக தண்ணீர் திறக்காத நிலையில் ஆற்றுப்பாசன விவசாயிகள் சம்பாசாகுபடியை தொடங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
இருந்தபோதும் ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணற்றுப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தற்போது நடவு பணிகளை தொடங்கிய விவசாயிகள், தங்களது வயலுக்கு கற்பூரம் காண்பிக்கப்பட்டு, மூத்த விவசாயிகளின் கால்களில் நாற்று கட்டுகளை வைத்து ஆசீர்வாதம் பெற்று நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். சென்ற ஆண்டு டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர;-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை மூலம் விவசாயிகள் பெற்று நெற்களை தெளித்து சாகுபடி செய்தனர். இதேபோல் இந்த ஆண்டும் வேளாண்மை துறை மூலம் விதை நெல்லை பெற்று சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

சம்பா சாகுபடியில் புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் கொலநோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவாரி 30 நாள் பயிர்களை (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்தால் மேற்கண்ட நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வளர்ந்த பயிhpல் கொப்பறை அதாவது (பூக்கிற தருவாய்) பனிகாலங்களில் ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நோய்தாக்கி மகசு+ல் குறையும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் சூரியன் ஒலி அடித்தூரில் படும் வகையில் இடைவெளி விட்டு பயிர்களை நட்டால் புகையான் என்னும் நோயை தவிர்க்கலாம் எனவும் வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். 120 நாட்களில் மகசூல் அடையும் இந்த வகை நெல் விதைகளை விவசாயிகள் வேளாண்மை துறைகளில் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சம்பா நாற்று உற்பத்தி பணிகளில் நவீன இயந்திரம் மூலம் நடவு செய்வதற்காக ஒரு சில பகுதிகளில் பாய் நாற்று உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடியில் முதல் கட்ட பயிர் நடவு பணிகளை முடித்த விவசாயிகள் தங்களது வயல்களில் பயிர் தூர் பிடிப்பதற்காக மருத்து தெளிக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

The post கடவூர் மற்றும் தோகைமலையில் சம்பா சாகுபடி பயிர்களுக்கு மருந்து தெளிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Thokaimalai ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...