×

தீத்தடுப்பு உபகரண பராமரிப்பு அவசியம் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற 100 குழந்தைகள் தஞ்சைக்கு சுற்றுலா

பெரம்பலூர்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையிலுள்ள 100 குழந்தைகளை தஞ்சை மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து வழி அனுப்பி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி பகுதியில் உள்ள ஹட் என்னும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் 100 குழந்தைகளை, தஞ்சாவூரில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் அரண்மனை, பெருவுடையார் கோயில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு நாள் பயணமாக சுற்றுலா துறையின் சார்பில் நேற்று அழைத்துச் சென்றனர். 2 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளை மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேரில் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடி இனிப்பு வழங்கி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

The post தீத்தடுப்பு உபகரண பராமரிப்பு அவசியம் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற 100 குழந்தைகள் தஞ்சைக்கு சுற்றுலா appeared first on Dinakaran.

Tags : Tanjore ,World Tourism Day ,Perambalur ,Perambalur district ,Tanjore district ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...