×

ஏரியில் மீன்பிடிக்க சென்ற வாலிபருக்கு சரமாரி அடி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, முத்துகாபட்டியில் செயல்படும் செங்கல் சூளையில், விழுப்புரம் மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன்(26), அவரது நண்பர் சிலம்பரசன்(23) ஆகியோர் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம், இருவரும் அருகில் உள்ள பழையபாளையம் ஏரியில், மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(24), மேதர்மாதேவி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(28) ஆகியோரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மீன் பிடிப்பதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து, வெங்கடேசனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ரஞ்சித், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

The post ஏரியில் மீன்பிடிக்க சென்ற வாலிபருக்கு சரமாரி அடி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Venkatesan ,Gunnathur, Villupuram district ,Muthukapatti ,Silambarasan ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்