×

மான் இறைச்சிக்கு லஞ்சம் 2 எஸ்ஐக்கள் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் வனவிலங்கு வேட்டை மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் தாளவாடி போலீசாரும், வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாளவாடி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்ஐ ரத்தினம், எஸ்எஸ்ஐக்கள் கோபால், பாலசுப்பிரமணி ஆகிய மூவரும் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர்களை வழக்கு போடாமல் விடுவிக்க சில கிலோ மான் இறைச்சியையும், சில ஆயிரம் ரூபாய் பணத்தையும் லஞ்சமாக வாங்கிவிட்டு விடுவித்தனர். ஆனால் அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர். விசாரித்தபோது அவர்கள் தாளவாடி போலீசார் இருவரிடம் மான் இறைச்சி, பணம் கொடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமாலுக்கு இது பற்றி தகவல் கூறினர். அவர் நடத்திய விசாரணையில், மான் இறைச்சி, பணம் வாங்கியது எஸ்ஐ ரத்தினம், எஸ்எஸ்ஐ கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

The post மான் இறைச்சிக்கு லஞ்சம் 2 எஸ்ஐக்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Talawadi Police ,Forest Department ,Erodu District, Talawadi Mountain ,Dinakaraan ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...