×

செல்போன் பறித்தவர் சுற்றிவளைத்து கைது

பெரம்பூர்: பெரம்பூர் கொல்லம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (38), மண்ணடியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், பேருந்து மூலம் மூலக்கடைக்கு வந்தார். அங்கிருந்து, மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், சங்கீதாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்றனர். அப்போது, பைக்கில் இருந்து கொள்ளையர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதில், 2 பேர் தப்பினர். ஒருவர் சிக்கினார். அவரை, எம்.கே.பி.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வியாசர்பாடி சுந்தரம் 6வது தெருவை சேர்ந்த ஹஜி (21) என்பது தெரிந்தது. கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளிகள் தினேஷ், சஞ்சய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post செல்போன் பறித்தவர் சுற்றிவளைத்து கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Sangeetha ,Kollam Garden ,Manadi ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...