×

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்த மருந்து, மாத்திரை பறிமுதல்: ரூ.5 லட்சம் மதிப்புள்ளவை


ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அருகே, வீட்டில் பதுக்கி வைத்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரை, பூச்சிக்கொல்லி மருந்துகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, வேதாளை அடுத்த பெருங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பேரில் உச்சிப்புளி போலீசார் மற்றும் மண்டபம் மரைன் போலீசார் பெருங்குளத்தில் உள்ள சாகுல்ஹமீது என்பவரது வீட்டில் நேற்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 23 பெட்டிகளில் 60 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 200 பாட்டில்களில் பூச்சிக்கொல்லி மருந்து பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 லட்சமாகும். சாகுல்ஹமீதுவிடம் விசாரணை செய்ததில், கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சாகுல்ஹமீது மீது உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்த மருந்து, மாத்திரை பறிமுதல்: ரூ.5 லட்சம் மதிப்புள்ளவை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramanathapuram ,Uchipulli ,
× RELATED ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு...