×

கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தன்னுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். ஹமாஸ் படையினருடன் போர் நடத்திவரும் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் துணை நிற்பதாக உறுதி அளித்தார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என மோடி தெரிவித்திருக்கிறார்.

The post கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Indians ,Israel ,Netanyahu ,Modi ,Delhi ,Narendra Modi ,Dinakaraan ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...