திருவையாறு: திருவையாறு அருகே ராயப்பேட்டை வடக்கு தெரு சுந்தரமூர்த்தி மகன் மதியழகன். இவர் அம்பாள் கிராமம் பிள்ளையார் கோவில் அருகே அரசு அனுமதியின்றி காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி ஏற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாட்டு வண்டியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அனுமதியின்றி மணல் திருட்டு மாட்டுவண்டி பறிமுதல் appeared first on Dinakaran.