×

பாலைவனநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறையில் பாலைவன நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருப்பாலைத்துறையில் பாலைவனநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் ஆகிய இருவரும் இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் காலி மனையை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலைத்துறையின் உதவி ஆணையர் கவிதா முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ரூ.16 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள பாலைவனநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தினை சீல் வைத்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

The post பாலைவனநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Balaivanathar temple ,Kumbakonam ,Desert Nath ,Tirupalaithura ,Hindu… ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி