×

மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம்

 

விருதுநகர், அக்.10: விருதுநகரில் தோட்டத்து மின்வேலியில் விழுந்து பெண் படுகாயமடைந்தார். விருதுநகர் கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி(28). இவர் மாடுகளை மேய்ப்பதற்காக கூரைக்குண்டு பகுதியில் காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது ரெங்கநாயகி என்பவரின் தோட்டத்துப்பக்கம் ஆடு, மாடுகளை ஓட்டி சென்ற போது பாண்டிச்செல்வி காலில் முள் குத்தியது.

இதில் நிலை தடுமாறி அங்கிருந்த மின்சார வேலியில் விழுந்துள்ளார். மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவரை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பாண்டிச்செல்வி சூலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் ரெங்கநாயகி மற்றும் வீரபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Pandichelvi ,Thakurkundu ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...