×

மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை: திருமணம் நடந்த 6 மாதத்தில் விபரீத முடிவு

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அருகே, திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதால், வாலிபர் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து இருப்பதை பார்த்த பொதுமக்கள் மறைமலைநகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மறைமலைநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் போலீசார் ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரியில் சடலமாக கிடந்தவர், சிங்கபெருமாள்கோவில் குப்பைகாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (28) என்பதும், இவர் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, சிங்கபெருமாள்கோவில் அருகே ஆப்பூர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர், குடும்ப பிரச்னை காரணமாக பாக்கியலட்சுமி இரு தினங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்றதால் துக்கம் தாங்க முடியாமல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை: திருமணம் நடந்த 6 மாதத்தில் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Singaperumal ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப...