×

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

மார்த்தண்டம், அக்.10: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட சிராயன்குழி பிலாங்காலை விளையை சேர்ந்தவர் வேல்முருகன் (45). மர வேலை செய்து வருகிறார். அவரது உறவினர் ஆறுமுகம் (71).இவர் கடந்த 34 ஆண்டுகளாக, வேல்முருகன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குளத்தில் சென்று பார்த்தபோது ஆறுமுகம் குளத்தில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Velmurugan ,Sirayankuzhi Bilangalai ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...