×

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் காவலர்கள் 4 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு தனது ஆண் நண்பருடன் சென்ற 17 வயது சிறுமியிடம், மது போதையில் இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாத், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகிய 4 பேர் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரே, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் 4 காவலர்களும் பணியில் இருந்தபோது குடிபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த 4 காவலர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் காவலர்கள் 4 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,CHENNAI ,DMDK ,Trichy ,Mukkombu ,Dinakaran ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!